மமைவாம்ஶோ ஜீவலோகே1 ஜீவபூ4த1: ஸனாத1ன: |
மன:ஷஷ்டானீன்த்3ரியாணி ப்1ரக்ருதி1ஸ்தா1னி க1ர்ஷதி1 ||7||
மம—--என்; ஏவ---மட்டும்; அன்ஶஹ----அணுவின் பாகங்கள்; ஜீவ-லோகே-—-பொருள் உலகில்; ஜீவ-பூதஹ---- உருஉற்ற ஆத்மாக்கள்; ஸனாதனஹ-----நித்தியமான; மனஹ----மனதுடன்; ஷஷ்டானி--—ஆறு; இந்திரியாணி-—--உணர்வுகள்; ப்ரகிரிதி-ஸ்தானி—---பொருள் இயற்கையால் கட்டுண்ட; கர்ஷதி---போராடுகின்றன
BG 15.7: இந்த ஜட உலகின் ஆத்மாக்கள் எனது நித்திய அணுவின் பாகம், ஆனால் ப்ரகி1ரிதி1- சக்தியின் அடிமைத்தனத்தால், அவர்கள் மனம் உட்பட ஆறு புலன்களுடன் போராடுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு தனது இருப்பிடத்திற்குச் செல்லும் ஆத்மாக்கள் திரும்பி வருவதில்லை என்று விளக்கினார். இப்போது அவர் பொருள் சாம்ராஜ்யத்தில் இருக்கும் ஆத்மாக்களைப் பற்றி பேசுகிறார். முதலாவதாக, அவர்களும் அவருடைய மிகவும் சிறிய துண்டான பகுதிகள் என்று அவர் உறுதியளிக்கிறார்.
எனவே, கடவுள் எந்த வகையான பகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம். அவை இரண்டு வகையானவை:
ஸ்வான்ஶ்: இவை அனைத்தும் ராம், ந்ரிசிங் மற்றும் வராஹ போன்ற கடவுளின் அவதாரங்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, எனவே அவர்கள் ஸ்வான்ஶ் என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது ஒருங்கிணைந்த பகுதிகள்.
விபி4ன்னாஶ்: இவை கடவுளின் வேறுபட்ட பகுதிகள். அவை கடவுளின் நேரடித் துண்டான பகுதிகள் அல்ல, மாறாக, அவை அவருடைய ஆன்மா ஆற்றலின் (ஜீவ சக்தி) பகுதிகள். இந்த வகையில் இருப்பில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் உட்படுகின்றன. இதை ஸ்ரீ கிருஷ்ணர் 7.5 வசனத்தில் அறிவித்தார். ‘ஆனால் ஜட ஆற்றலுக்கு அப்பால், ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனனே, என்னுடைய மற்றொரு உயர்ந்த ஆற்றல் உள்ளது. இது இவ்வுலக வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் உடலமைந்த ஆத்மாக்கள்.’
மேலும், விபி4ன்னான்ஶ் ஆத்மாக்கள் மூன்று வகையானவை:
நித்1ய ஸித்3த4: இந்த ஆத்மாக்கள் எப்பொழுதும் முக்தி நிலையிலேயே இருந்து, நித்தியமாக இறைவனின் லோகத்தில் தங்கி, அவருடைய பொழுதுபோக்குகளில் பங்கு கொள்கின்றன.
ஸாத4ன் ஸித்3த4: இவர்களும் நம்மைப் போன்ற ஆன்மாக்கள் முன்பு பொருள் உலகில் வாழ்ந்தவர்கள் ஆனால் அவர்கள் கடுமையான ஆன்மீக பயிற்சி மற்றும் ஆழ்ந்த பக்தி மூலம் இறைவனை அடைந்தனர். இப்போது அவர்கள் தெய்வீக மண்டலத்தில் நிரந்தரமாக வாழ்கிறார்கள் மற்றும் கடவுளின் பொழுது போக்குகளில் பங்கேற்கிறார்கள்.
நித்1 ய பத்3த4 : இந்த ஆத்மாக்கள் நிரந்தர காலமாக ஜட உலகில் வசிக்கின்றனர். இவை ஐந்து புலன்களிலும் மனதிலும் மூழ்கி அதனால் போராடிக் கொண்டிருக்கின்றன.
க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது:
ப1ராஞ்சி1 கா2னி வ்யத்1ரிணத்1ஸ்வயம்பூ4ஹு (2.1.1)
‘படைப்பவர், ப்ரஹ்மா, உலகின் பக்கம் திரும்பும் வகையில் புலன்களை உருவாக்கி உள்ளார்.’ நித்ய நிபந்தனைக்குட்பட்ட இந்த விபின்னான்ஶ் ஆத்மாக்கள், அவர்கள் மனதையும் புலன்களையும் திருப்திப்படுத்துவதற்குப் போராடி துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அவர் இப்போது பின்வரும் வசனத்தில், ஆன்மா மரணத்திற்குப் பிறகு மற்றொரு உடலுக்குள் செல்லும்போது மனம் மற்றும் புலன்களுக்கு என்ன நடக்கிறது என்பதை விளக்குகிறார்.
மமைவாம்ஶோ ஜீவலோகே1 ஜீவபூ4த1: ஸனாத1ன: |
மன:ஷஷ்டானீன்த்3ரியாணி ப்1ரக்ருதி1ஸ்தா1னி க1ர்ஷதி1 ||7||
இந்த ஜட உலகின் ஆத்மாக்கள் எனது நித்திய அணுவின் பாகம், ஆனால் ப்ரகி1ரிதி1- சக்தியின் அடிமைத்தனத்தால், அவர்கள் மனம் உட்பட ஆறு புலன்களுடன் போராடுகிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily